Pages

Tuesday, August 18, 2026

கங்கு அணையாம பாத்துக்கணும்

 “கங்கு அணையாம பாத்துக்கணும்” — இதுதான் ராஜா சார் கமலுக்கு ஆரம்ப காலத்திலேயே சொன்ன advice.

பேசுறவன் என்ன வேணா பேசட்டும்.

நாம் நம்ம வேலையைச் செம்மையாக செய்வோம்.


ராஜா அவர்களின் தொடர் ஓட்டம் கடலின் ஓயாத அலை போல… ஒரு தீரா நதி போல…


He has an eternal “fire in the belly”.


ஆனால் அந்தக் கங்கு வெறும் ambition அல்ல.


அது ரசனை.


ரசனை → ஆர்வம் → ஓயாத தேடல் → புதிய பரிணாமம் → புதுப்பிக்கப்பட்ட ரசனை → புதிய ஆர்வம் → மீண்டும் தேடல்…


His loop goes on and on.


அதுதான் அவருடைய தனித்துவம்.


ஒரு புதிய படைப்பு அவருடைய தேடலை முடிப்பதில்லை; அது அடுத்த தேடலுக்கான கதவைத் திறக்கிறது.


ஒரு புதிய கண்டுபிடிப்பு ரசனையை முடிப்பதில்லை;அது புதுப்பிக்கப்பட்ட ரசனையாக மாறுகிறது.


அதனால் இது ஒரு loop மட்டுமல்ல.


இது ஒரு ever-expanding spiral.


ஒவ்வொரு சுற்றிலும் அவர் அதே இடத்திற்குத் திரும்புவது போலத் தெரிந்தாலும், இன்னும் ஆழமான ஒரு புதிய இடத்தில் இருக்கிறார்.


இதனால்தான் அவர் அவ்வளவு நம்பிக்கையுடன்,


“எனக்கு இசை தெரியாது.”


என்று சொல்ல முடிகிறது.


அது அறியாமையின் வாக்கியம் அல்ல. போலியான humility அல்ல..

இசையை ஒரு முடிந்த subject-ஆகவே அவர் பார்க்கவில்லை என்பதன் சுருக்கம். 


நாம் இசையை ராகம், தாளம், harmony, counterpoint, folk, classical, Western என்று பிரித்து அறிகிறோம்.


அவருக்கோ அவை அனைத்தும்—


ஒரே பிரிக்கப்படாத, தொடர்ந்து விரிந்துகொண்டே இருக்கும் இசைத் தொடர்ச்சியின் வெவ்வேறு வெளிப்பாடுகள்.

A musical continuum ...


அதனால் அவருக்கு தெரியும் நமக்கு 

“இசை தெரியும்” என்று சொல்லி முடித்துவிட முடியாது.


ஏனென்றால் அந்த இசைத் தொடர்ச்சிக்கு முடிவே இல்லை.


அவரது ரசனை முடிவதில்லை.

ஆர்வம் தீர்வதில்லை.

தேடல் நிற்பதில்லை.

பரிணாமம் முடிவதில்லை.


கங்கு அணையாமல் இருக்கும் வரை —

ராஜாவின் ஓட்டமும் நிற்காது.


That, perhaps, is the secret of the Maestro’s endless journey.